/* */

என்ஐஏ சோதனையை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

NIA Raid -தென்காசியில் என்ஐஏ சோதனையை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

NIA Raid | Protest News
X

என்ஐஏ சோதனையை கண்டித்து தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

NIA Raid -நேற்று தமிழக முழுவதும் கோவை, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் தேசிய புலனாய்வு முகமையினர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகத்திலும் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி தென்காசி மாவட்டம், பண்பொழி கிராமத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது அலி ஜின்னா அவரது வீட்டில் இன்று காலை தேசிய புலனாய்வு முகமையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் திடீரெனப் அப்பகுதியில் உள்ள பாப்புல பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதில் சுமார் 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனையை கண்டித்து கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட போவதாக தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.

காலை பெரிய பள்ளிவாசல் பகுதியில் இருந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் 60-க்கும் மேற்பட்டோர், சோதனையை கண்டித்து கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் ஏகே அமின் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் திப்பு சுல்தான் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 23 Sep 2022 10:18 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  2. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  3. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  4. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  6. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  7. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  8. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  9. தொழில்நுட்பம்
    ஐபோன் மேல் மோகம்: விலை குறைப்பு!
  10. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்