/* */

புளியரை சோதனைச்சாவடியில் ரூ. 21 ஆயிரம் லாட்டரி சீட்டு பறிமுதல்

புளியரை சோதனைச்சாவடியில் ரூபாய் 21 ஆயிரம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

புளியரை சோதனைச்சாவடியில் ரூ. 21 ஆயிரம் லாட்டரி சீட்டு பறிமுதல்
X

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு லாட்டரி சீட்டுகள் போன்றவற்றை கொண்டு வருவதை முற்றிலும் தடுக்கும் விதமாக, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில், சோதனைச்சாவடிகளில், காவல் துறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள புளியரை சோதனைச்சாவடியில், சார்பு ஆய்வாளர் முத்து கணேசன் மற்றும் காவலர் சாகுல் ஹமீது ஆகியோர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் விற்பனைக்காக சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை கேரளாவில் இருந்து தமிழகம் கொண்டு வந்த கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சித்திரை கண்ணு என்பவரின் மகன் வேலுச்சாமி (56) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 21,600 மதிப்பிலான 540 லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On: 4 Dec 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    உங்க பாட்டியே எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை! ராகுலுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    மருமகள் என்பவர் இன்னொரு மகளாக இருக்கமுடியுமா?
  3. தமிழ்நாடு
    தமிழக மக்களவைத் தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விபரம்
  4. லைஃப்ஸ்டைல்
    'பாரபட்ஷம்' நியாயத்தை கொல்லும் கூர்வாள்..!
  5. மதுரை
    மதுரை வாக்குச்சாவடியில் காவி முண்டாசு கட்டிய தேர்தல் அலுவலர்!...
  6. லைஃப்ஸ்டைல்
    ஈருயிர் ஓருயிராக உருவெடுத்த கணவன்-மனைவி உறவு..!
  7. லைஃப்ஸ்டைல்
    ரமழான் ஒவ்வொரு இஸ்லாமியர்களின் இதயத்தை நிரப்பும் பண்டிகை..!
  8. சங்கரன்கோவில்
    சங்கரன்கோவில் அருகே தேர்தல் புறக்கணிப்பு! 1000 ஓட்டுகளில் 1௦ மட்டுமே...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘என்றாவது ஒரு நாள், நான் இல்லாமல் போவேன்’ - மனிதர்களுக்கு மரணம்...
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் இரவு 7 மணி நிலவரப்படி 71.42 சதவீதம் வாக்குப்பதிவு