Begin typing your search above and press return to search.
வனப்பகுதியில் வேட்டையில் ஈடுபட்ட நான்கு பேர் நாய்களுடன் கைது
தென்காசி அருகே வனப்பகுதியில் வேட்டையில் ஈடுபட்ட நான்கு பேர் நாய்களுடன் கைது செய்யப்பட்டனர்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம், பண்பொழி அருகில் ரேஞ்சர் சுரேஷ் தலைமையில், வனவர் அம்பலவாணன், செல்லத்துரை , வனக்காபாளர் ஆறுமுகம், ராஜா, முத்துசாமி ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வேட்டை நாய்களுடன் வேட்டைக்கு சென்ற 4 நபர்கள் கைது செய்தனர்.
மாவட்ட வன அலுவலர் இளையராஜா உத்தரன்படி, தலா ரூபாய் 30000 வீதம் மொத்தம் 120000 /- அபராதம் விதிக்கப்பட்டது. இனிய வரும் காலங்களில் இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என இதன் மூலம் வனத்துறை சார்பில் எச்சரித்துள்ளது.