/* */

டெல்லியில் பெண் காவலர் படுகொலை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் பெண் காவலர் படுகொலை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

டெல்லியில் பெண் காவலர் படுகொலை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
X

கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில செயலாளர் பைசல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டெல்லியில் கடந்த வாரம் ராபியா என்கிற பெண் போலீசார் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரியும் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில செயலாளர் பைசல் தலைமையில் நடைபெற்றது.

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக உலக அளவில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு பெண்களுக்கான பாதுகாப்பை முன்னெடுக்க தவறிவிட்டது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. டெல்லியில் நடைபெற்ற இந்த சம்பவம் உலக அரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.

காவல்துறையில் பணியாற்றிய பெண் போலீசாருக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு மற்ற அரசு ஊழியர்களாக இருக்கும் பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 21 வயதான இப்பெண் மனித மிருகங்களால் 50க்கும் மேற்பட்ட இடங்களில் பெண் போலீசாரின் உடல் சிதைக்கப்பட்டு கற்பழித்து படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

இந்த சம்பவம் வெளிவராதபடி அரசும் மூடி மறைக்கும் வேலையை செய்திருக்கிறது. டெல்லியின் பாதுகாப்புத்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்கிற போதும் இந்த குற்றவாளிகள் இதுவரை கைது செய்து தண்டிக்கப்படாமல் இருப்பது மத்திய அரசு பெண்களை பாதுகாப்பதில் தவறிவிட்டது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர், ரஹ்மானியாபுரம், மக்காநகர், மதினா நகர், தவ்ஹீத் நகர், இக்பால் நகர், மாவடிக்கால், திரிகூடபுரம், புளியங்குடி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி, அச்சன்புதூர், வடகரை, செங்கோட்டை, வாவா நகரம், வீரணம், மாலிக்நகர், பொட்டல்புதூர் போன்ற ஊர்களில் இருந்து ஏராளமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள் பொதுமக்கள்உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் இறுதியில் மாவட்ட துணைச் செயலாளர் வல்லம் அஹ்மத் நன்றி கூறினார்.

Updated On: 7 Sep 2021 2:38 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  5. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  6. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  7. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  8. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  9. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!