/* */

அருந்து கிடந்த மின் கம்பியை மிதித்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு

செங்கோட்டை அருகே அருந்து கிடந்த மின் கம்பியை மிதித்த ஆட்டோ ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

அருந்து கிடந்த மின் கம்பியை மிதித்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு
X

உயிரிழந்த முகமது மைதீன்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பண்பொழி பகுதியை சேர்ந்தவர் செய்யது. இவரது மகன் முகமது மைதீன் (வயது 46) ஆட்டோ டிரைவரான இவர் இன்று பண்பொழி -திருமலைகோவில் சாலையில் உள்ள அவரது உறவினரான ஜவாகிருல்லா என்பவரது தோட்டத்திற்கு இன்று காலை சென்றுள்ளார்.

அப்பொழுது நேற்று இரவு பண்பொழி பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக மின் கம்பி ஒன்று அறுந்து தோட்டத்தில் கிடந்துள்ளது.

இதை கவனிக்காத முகமது மைதீன் மின் கம்பியில் மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட முகமது மைதீன் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த அச்சன்புதூர் போலீசார் முஹம்மது மைதீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 1 July 2022 7:47 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  2. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  5. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  6. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  7. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  10. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...