/* */

கடன் கொடுக்காதவரை தாக்கி கொலை மிரட்டல்- இளைஞர் கைது

கடன் கொடுக்காதவரை தாக்கி கொலை மிரட்டல்- இளைஞர் கைது
X

கீழ ஆம்பூரில் பெட்டிக்கடையில் கடன் கொடுக்காததால் கடைக்காரரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ ஆம்பூரில் பாலசுப்பிரமணியன் என்பவர் பெட்டிக்கடை வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது கடைக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (19) என்பவர் தண்ணீர் பாட்டில் கடனாக கேட்டுள்ளார். ஏற்கனவே கொடுத்த வேண்டிய கடனைக் கொடுத்து விட்டு தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொள்ளுமாறு பாலசுப்பிரமணியன் கூறியதற்கு அவரை அசிங்கமாக பேசி கடைக்குள் அத்துமீறி நுழைந்து,கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பாலசுப்ரமணியன் ஆழ்வார்குறிச்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் எஸ்ஐ., முத்துகிருஷ்ணன் விசாரணை நடத்தி கீழ ஆம்பூர் தங்கம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிரம்மாட்சி என்பவரின் மகன் கார்த்திக்(19) மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

Updated On: 21 April 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்