/* */

வீ.கே.புதூர் அருகே மது போதையில் நண்பரை, வெட்டி கொலை செய்ய முயன்ற வாலிபர் கைது

வீ.கே.புதூர் அருகே மது போதையி் நண்பரை, வெட்டி கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

வீ.கே.புதூர் அருகே மது போதையில் நண்பரை, வெட்டி கொலை செய்ய முயன்ற வாலிபர் கைது
X

தென்காசி அருகே போதையில் நண்பரை வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ( பைல் படம்)

வீ.கே.புதூர் அருகே உள்ள கழுநீர்குளம் பட்டமுடையார்புரம் ரோட்டில் வசித்து வருபவர் தர்மராஜ் மகன் செல்வகணி (வயது 36) இவரும் அதே ஊரைச் சேர்ந்த பாரதியார் தெருவில் வசித்து வரும் ராமர் என்பவர் மகன் சக்தி (வயது 38) என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் எப்போதும் ஒன்றாகவே சுற்றித் திரிவார்களாம்.

இந்நிலையில் திருமணமான சக்தி கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து மன வருத்தத்தில் இருந்த சக்தி நேற்று மாலையில் தனது நண்பர் செல்வக்கனியிடம் தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

அப்போது சக்தி குடிபோதையில் இருந்ததால் இப்போது அதை பேச வேண்டாம் நாளை காலையில் பேசிக்கொள்ளலாம் என செல்வகணி கூறியுள்ளார்.

நீ ஏன் எனது மனைவியை இன்றே என்னுடன் சேர்த்து வைக்காமல் தாமதப்படுத்துகிறாய் இன்றே என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என சக்தி நண்பனை வலியுறுத்தியுள்ளார்.

செல்வகனி நாளை காலை பார்த்துக்கொள்ளலாம் என கூறி மறுக்கவே போதையில் எதிர்பாராதவிதமாக சக்தி வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து செல்வக்கனியை வெட்டியுள்ளார்.

இதில் இடுப்பு மற்றும் வயிறு பகுதிகளில் வெட்டுக்காயம் அடைந்த செல்வகனியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த தகவலின் பேரில் சுரண்டை காவல் ஆய்வாளர் சுரேஷ் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். உதவி ஆய்வாளர் காஜா முகைதீன் வழக்குப்பதிவு செய்து நண்பனை வெட்டியதாக சக்தியை கைது செய்தனர்.

Updated On: 19 July 2021 1:52 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ரமழான் ஒவ்வொரு இஸ்லாமியர்களின் இதயத்தை நிரப்பும் பண்டிகை..!
  2. சங்கரன்கோவில்
    சங்கரன்கோவில் அருகே தேர்தல் புறக்கணிப்பு! 1000 ஓட்டுகளில் 1௦ மட்டுமே...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘என்றாவது ஒரு நாள், நான் இல்லாமல் போவேன்’ - மனிதர்களுக்கு மரணம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எமை ஈன்றெடுத்த தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து..!
  5. சூலூர்
    104 வயதில் தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய முதியவர்
  6. லைஃப்ஸ்டைல்
    பாசத்துடன் பண்பினை புகட்டிய தாத்தா..!
  7. லைஃப்ஸ்டைல்
    ஈடு செய்ய இயலாத இழப்பின் கொடூரம் - மரணத்தின் வலிகள் குறித்த...
  8. லைஃப்ஸ்டைல்
    நாம் வணங்கும் நேர் கண்ட தெய்வம், அப்பா..!
  9. கோவை மாநகர்
    கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...
  10. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரம்: 71.44 சதவீதம்...