/* */

யானையின் தந்தம் விற்க முயன்ற இருவர் கைது

கடையம் வனப்பகுதியில் இறந்த யானையின் தந்தத்தை விற்க முயன்றதாக இருவர் கைது

HIGHLIGHTS

யானையின் தந்தம் விற்க முயன்ற இருவர் கைது
X

கடையத்தில், தந்தம் விற்க முயன்றதாக கைது செய்யப்பட்டவர்கள்

தென்காசி மாவட்டம் கடையம் வனப்பகுதியில் இறந்து கிடந்த யானையின் தந்தத்தை திருடி விற்க முயன்றதாக இருவரை வனத்துறையினர் கைது செய்து தந்தத்தைப் பறிமுதல் செய்தனர்.

கடையம், அருகே அழகப்பபுரத்தில் இருவர் யானை தந்தம் விற்க முயல்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின் பேரில் வனச்சரகர் (பொ) பரத் தலைமையில் வனத்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது அழகப்பபுரத்தைச் சேர்ந்த கல்யாணி மகன் கணேசன் (46), சுடலையாண்டி மகன் இன்பராஜ் (30) ஆகியோர் யானை தந்தம் வைத்திருந்ததும் அதை விற்க முயன்றதும் தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் விசாரித்ததில் கடையம் வனச்சரகம், கோரக்கநாதர் பீட் பகுதியில் இறந்து கிடந்த யானை தந்தத்தை திருடி வந்து விற்க முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 7 May 2021 5:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  3. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  4. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  5. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  6. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  9. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  10. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...