/* */

விவசாய பயிர் நடவு முறைகள் குறித்து மாணவிகள் விளக்கம்

விவசாய பயிர் நடவு முறைகள் குறித்து மாணவிகள் விளக்கம்
X

தென்காசி மாவட்டம் கடையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு தேவையான பயிர் நடவு முறைகள் குறித்து செயல்முறை பயிற்சி விளக்கம் அளித்தனர்.

தென்காசி மாவட்டம் கடையத்தில் தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் ஊரக வேளாண் அனுபவ திட்டத்தின்படி கடையம் சுற்றுவட்டார பகுதிகளான வெய்கால்பட்டி மந்தியூர், உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகளின் வயல்களுக்கு நேரடியாகச் சென்று செயல் விளக்கமாக பஞ்சகவ்யம் தயாரிப்பது மற்றும் அறிவியல் முறைகளில் விவசாயம் செய்வது குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர்.

ஒருங்கிணைந்த பண்ணை முறையில் ஆடு வளர்ப்பு, மீன்வளர்ப்பு செய்வது குறித்தும் மாடி தோட்டம் மற்றும் பக்கவாட்டு சுவர்களில் தோட்டம் அமைத்து காய்கறி வளர்ப்பது குறித்தும் மாதிரி வடிவங்களை தயார் செய்து விவசாயிகளுக்கு விளக்கி காண்பித்தனர். விவசாயிகள் திரளானோர் வந்து ஆர்வமுடன் கண்காட்சியை பார்த்து சென்றனர். இந்நிகழ்ச்சியில் எழிலரசி, சுபத்ரா, கார்த்திகா ,சந்தியா, அஸ்மினா, கார்த்தியாயினி ஷர்மிளா ஐஸ்வர்யா நித்தியமாலதி, கிறிஸ்டினா ஆகியோர் கலந்து கொண்டு செயல் விளக்கத்தை செய்து காட்டினார்கள்.

Updated On: 14 April 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி