/* */

வழி தவறி வந்த, பிறந்து 60 நாளே ஆன மான், மீட்ட தன்னார்வலர்கள்

ஆலங்குளத்தில் வழி தவறி வந்த, பிறந்து 60 நாளே ஆன மான்குட்டி தன்னார்வலர்களால் மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.

HIGHLIGHTS

வழி தவறி வந்த, பிறந்து 60 நாளே ஆன மான்,  மீட்ட தன்னார்வலர்கள்
X

வழி தவறி ஊருக்குள் வந்த மான் குட்டியை மீட்ட தன்னார்வலர்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊருக்கு மேல்புறம் நெல்லை தென்காசி சாலை ஓரம் வயல் பகுதியில் மான் குட்டி ஒன்று நடக்க முடியாமல் சோர்வான நிலையில் இருந்தது. இதனை பார்த்த விவசாயிகள் ஆலங்குளம் பசுமை இயக்கம் தன்னார்வலர்களுக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் பசுமை இயக்க தலைவர் சாமுவேல் பிரபு மற்றும் தன்னார்வலர்கள் பாலாஜி, முத்து செல்வம் ஆகியோர் பிறந்து 60 நாளே ஆன மான் குட்டியை பத்திரமாக மீட்டு வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

மீட்கப்பட்ட மானை அருகில் இருந்த தீயனைப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று தண்ணீர் கொடுத்தனர். இதனால் சோர்வு நீங்கி சகஜ நிலைக்கு வந்தது. அதனை தொடர்ந்து மான் குட்டி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு ஆலங்குளம் வனப்பகுதியில் விடப்பட்டது.

மீட்கப்பட்ட மான்குட்டி கடந்த 2 நாளாக வழி தவறி அந்த பகுதியில் தனியாக தத்தி தத்தி சென்றதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Updated On: 3 Sep 2021 4:09 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  2. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  3. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  4. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  5. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  6. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  7. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்
  8. ஆன்மீகம்
    நினைத்தால் போதும்..! கேளாது வரம் தரும் ஷீரடி சாய்பாபா..!
  9. லைஃப்ஸ்டைல்
    விட்டுக் கொடுக்கமுடியாத கட்டு உறவு, சகோதர பாசம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    விவசாயத்தின் வேதனை – விளைநிலங்கள் விற்பனைக்கு !