/* */

டூவீலரில் சென்ற போது விபத்து: பெண் பலி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, டூவிலரில் சென்றபோது கீழே விழுந்து, பெண் பலியானார்.

HIGHLIGHTS

டூவீலரில் சென்ற போது விபத்து: பெண் பலி
X

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேஅய்யனார்குளத்தை சேர்ந்தவர் பரமசிவன். இவரது மனைவி சுப்புலட்சுமி(52). இருவரும் தனது மூன்றாவது மகள் திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுப்பதற்காக முக்கூடல் அருகே உள்ள அரசன்குளத்திற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.

மருதம்புத்தூர் அருகே சென்று கொண்டிருக்கும்போது, பின்னால் இருந்த சுப்புலட்சுமி நிலைதடுமாறி மொபட்டில் இருந்து சாலையில் விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த சுப்புலட்சுமியை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைகாக பாளையங்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக, சுப்புலட்சுமி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 April 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்
  4. இந்தியா
    இந்தியாவின் ஏவுகணை பலம் தெரிந்து பதுங்கும் நாடுகள்..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஆரணி
    ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத ஸ்ரீதா்மராஜா கோவிலில் ராஜசுய யாக வேள்வி