Begin typing your search above and press return to search.
சுரண்டை அரசு மருத்துவமனைக்கு இடம் தேர்வு- அதிகாரிகள் ஆய்வு
தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் படுக்கை வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சுரண்டையில் அரசு மருத்துவமனை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் வகையில் வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் வெங்கடேஷ், தலைமையிலான அரசு அதிகாரிகள் சுரண்டை பகுதிகளில் பல்வேறு இடங்களை ஆய்வு செய்தனர். மருத்துவமனை அமைப்பதற்க்கான சாத்தியக்கூறுகள், போதிய இட வசதி, போக்குவரத்து வசதி, நோயாளிகள் வந்து செல்லும் வகையில் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.