Begin typing your search above and press return to search.
ஆலங்குளம்: கழுநீர்குளம் சாலையை திறந்து வைத்த நெல்லை எம்பி
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே, கழுநீர்குளம் சாலையை திறந்து வைத்த நெல்லை எம்பி ஞானதிரவியம் திறந்து வைத்தார்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம், கழுநீர்குளம் ஊராட்சியில், மறவர் சாஸ்தா கோவில் செல்லும் வழி உள்ளது. இதனை தார் சாலையாக மாற்ற வேண்டும் என்று, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்கிற நிகழ்ச்சியின்போது மனு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த வழியில் தார் சாலை அமைக்கப்பட்டது.
புதிய சாலையை, திமுக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், திமுக மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் முருகன், கிளை செயலாளர் சின்னமுருகன், திருமலைக்குமார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆண்ட பெருமாள் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.