/* */

உள் விளையாட்டு அரங்கம் அமைக்க இலவசமாக இடம் வழங்கக்கோரி முன்னாள் எம்எல்ஏ மனு

File A Petition - தென்காசி மாவட்டத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க இலவசமாக இடம் வழங்கக்கோரி முன்னாள் எம்எல்ஏ பூங்கோதை மாவட்ட ஆட்சியரிடம் மனு.

HIGHLIGHTS

File A Petition	| Stadium Sports
X

மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் மனு அளித்த முன்னாள் எம்எல்ஏ பூங்கோதை.

File A Petition -ஆலங்குளம் முன்னாள் எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ஆலடி அருணா அறக்கட்டளை முக்கிய நோக்கங்களில் ஒன்றானது கல்வி, விளையாட்டு துறை வாயிலாக இளைய சமுதாயத்தை முன்னேற்றிட வேண்டும் என்பதே தமிழக முதல்வர் ஒவ்வொரு தொகுதியிலும் உலகத்தரம் வாய்ந்த உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். எனவே ஆலடி அருணா அறக்கட்டளை அரசு உள் விளையாட்டு அரங்கத்தை அமைத்திட ஆலங்குளம் தாலுகா புதுப்பட்டி கிராமம் 1கிராமத்திலுள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்கிட தயாராக உள்ளது. மேலும் இந்த விளையாட்டரங்கம் சர்வதேச அளவில் உருவாக்கிட ஆலடி அருணா அறக்கட்டளை வாயிலாக உதவிட விரும்புகின்றோம். எனவே ஆலங்குளம் தொகுதியில் விளையாட்டுத்துறையில் மாணவ-மாணவியர்கள் உயர்ந்திட எனது தந்தை ஆலடி அருணா வழியில் பங்களிக்க விரும்புகின்றேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் இருந்து பொதுமக்கள் சார்பாக அவரிடம் கொடுக்கப்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைம்பெண் உதவித்தொகை கேட்டு கொடுக்கப்பட்டுள்ள மனுக்களையும் கலெக்டரிடம் வழங்கினார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 30 Jun 2022 9:26 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...
  2. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்
  3. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  4. காஞ்சிபுரம்
    ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன்...
  5. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  6. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  7. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...
  8. மதுரை மாநகர்
    மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
  9. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே கோயில்களில் மெகா விருந்து
  10. இராஜபாளையம்
    காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்