/* */

கண்ணைக் கட்டிய நிலையில் ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டதால் பரபரப்பு

கண்ணை கட்டிய நிலையில் பேரறிவாளன் விடுதலை செய்ததை கண்டிக்கிறோம் என்று கோஷமிட்டபடி யூனியன் அலுவலக வளாகத்தில் நுழைந்ததால் பரபரப்பு.

HIGHLIGHTS

கண்ணைக் கட்டிய நிலையில்  ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டதால் பரபரப்பு
X

கண்ணை கட்டிக் கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள். 

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் இன்று நடைபெற்றது. பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் கட்சி இன்று போராட்டம் அறிவித்த நிலையில், இன்று கடையத்தில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் தெற்கு கடையம் காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார் ராஜீவ் காந்தி படத்துடன் கண்ணை கட்டிய நிலையில் பேரறிவாளன் விடுதலை செய்ததை கண்டிக்கிறோம் என்று கோஷமிட்டபடி யூனியன் அலுவலக வளாகத்தில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோஷமிட்டபடி நுழைந்த அவர் ஒன்றிய கவுன்சிலர்களின் இருக்கையில் ராஜீவ் காந்தியின் படத்தை வைத்து மலர் அஞ்சலி செலுத்தினார். அப்போது அப்போது துணைச் சேர்மன் மகேஷ் மாயவன் தலைவர்கள் படத்தை மன்ற கூட்டத்தில் டேபிளில் வைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்

முன்னாள் பிரதமர் படத்தை வைப்பேன் என்று மாரி குமார் வாக்குவாதம் செய்ய மன்றத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டது .கடையம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளரும் 13 வார்டு கவுன்சிலருமான ஜெயக்குமார் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையும், தலைவர்களையும் மதிக்கிறோம். மன்ற கூட்டத்தில் தலைவர்கள் படத்தை வைப்பது மரபு அல்ல என்று எடுத்துக் கூறினார். பின்பு காங்கிரஸ் கவுன்சிலர் மாரி குமார் படத்தை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

Updated On: 19 May 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்