/* */

ஆலங்குளத்தில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு

ஆலங்குளத்தில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு
X

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் திமுக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் தலைமை தாங்கினார். மதிமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். திமுக நகர செயலாளர் வில்சன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். திமுக மாவட்ட செயலாளர் பத்மநாதன், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் இணைந்து தேர்தல் அலுவலகத்தை திறந்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றிய பேரூர் கிளை கழக செயலாளர்கள் வேட்பாளர் வாக்கு சேகரிக்க வரும்போது அனைத்துக் கூட்டணி கட்சிப் பிரதிநிதிகளையும் அழைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் ஆலங்குளம் காங்கிரஸ் நகர தலைவர் தங்கச் செல்வன், உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பேரூர், கிளைக் கழகச் செயலாளர்கள் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 21 March 2021 7:04 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?