Begin typing your search above and press return to search.
பாவூர்சத்திரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
பாவூர்சத்திரத்தை சேர்ந்த அன்பழகன் என்பவரது சோபியா (20) இன்ஜினியரிங் படித்து வருகிறார். சம்பவத்தன்று காலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் ஊர் அருகே உள்ள கிணற்றின் அருகில் அவரது செருப்பு கிடப்பதை பார்த்துள்ளனர்.இதுகுறித்து தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ், மற்றும் வீரர்கள் ராஜ்குமார் ,ஆறுமுகம், கார்த்திகேயன், மணிகண்டன் ஆகியோர் நீண்ட நேரம் தேடி கிணற்றுக்குள் சடலமாக கிடந்த சோபியாவை மீட்டனர். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.