/* */

ஆலங்குளம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் குளத்தில் மூழ்கி பலியாகினர்.

HIGHLIGHTS

ஆலங்குளம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழப்பு
X

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது சண்முகபுரம். இந்த ஊரைச் சார்ந்தவர்கள் கண்ணன், பூபாலன், தங்கராஜ். இவர்கள் அனைவரும் உறவினர்கள். இவர்களது குழந்தைகளான புவன் (4) இஷாந்த் (5) சண்முகபிரியா (எ) இந்துமதி ஆகிய 3 பேரும் வீட்டின் அருகே உள்ள கோவிலில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

திடீரென குழந்தைகளைக் காணவில்லை. இதனை தொடர்ந்து உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். குழந்தைகள் அருகே உள்ள பட்டர் குளத்திற்கு செல்லும் வழியில் சென்றதாக தகவல் கிடைக்கவே அங்கு சென்று தேடினார். குளத்தில் குழந்தைகளின் சட்டை மிதந்துள்ளது. அதனைத் தொடர்ந்து உறவினர்கள் அப்பகுதியில் தேடினார்கள். அப்போது குளத்தில் இருந்து மூன்று குழந்தைகளும் சடலமாக மீட்கப்பட்டது.

குழந்தைகளின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று குழந்தைகள் உயிரிழந்திருப்பது கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 2 July 2021 3:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி