/* */

காட்டுப்பகுதியில் பதுக்கிய ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ரேசன் அரிசி பறிமுதல்

ஆலங்குளம் அருகே காட்டுப்பகுதியில் பதுக்கிய ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

காட்டுப்பகுதியில் பதுக்கிய ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ரேசன் அரிசி பறிமுதல்
X

ஆலங்குளம் அருகே காட்டுப்பகுதியில் பதுக்கிய ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ரேசன் அரிசி பறிமுதல்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த அத்தியூத்து விலக்கில் இருந்து ஆண்டிப்பட்டி செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ஆலங்குளம் தனிவருவாய் ஆய்வாளர் பேச்சி, வட்டவழங்கல் அலுவலர் ஜெட்லெட் ஜெயா ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த நிலையில் இன்று மதியம் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்ட போது 50 கிலோ எடை கொண்ட 100 ரேசன் அரிசி மூட்டைகள் ஓரிடத்திலும், சற்று தொலைவில் 100 மூட்டைகளும் பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது. மொத்தம் ரூபாய் 1.50 லட்சம் மதிப்பிலான 200 ரேசன் அரிசி மூட்டைகளை வருவாய் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து ஆலங்குளம் நுகர் பொருள் வாணிபக்கழக கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.

இந்த ரேசன் அரிசி மூட்டைகள் கேரளாவிற்கு கடத்தி செல்ல பதுக்கி வைக்கப்பட்டதா? ரேசன் அரிசி கடத்தல் கும்பல் யார்? என்று உணவு வழங்கல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 15 July 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்