/* */

வியாபாரி வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை

வியாபாரி வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை
X

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே தேங்காய் வியாபாரி வீட்டில் சுமார் 50 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் பூமணி. தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது மனைவியோடு நேற்று மதுரை மருத்துவமனைக்கு சென்றுள்ளார். வீட்டில் இருந்த மகன் சங்கர் பாவூர்சத்திரம் அருகே உள்ள புங்கம்பட்டிக்கு தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். மதியத்திற்கு மேல் வீடு திரும்பிய சங்கர் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்ட நிலையில் உள்ளே இருந்த சுமார் 50 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கப்பணம் 1 லட்ச ரூபாய் திருடு போனது தெரிய வந்துள்ளது.இது குறித்து சங்கர் பாவூர்சத்திரம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த பாவூர்சத்திரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 23 Feb 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  5. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  6. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  7. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  8. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  9. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஆட்சியர், எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள் வாக்களிப்பு..!