/* */

பள்ளி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

பள்ளி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
X

தென்காசி மாவட்டம் சுரண்டையில் பங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல்நிலை பள்ளி என்எஸ்எஸ் மாணவர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பேரணியை வீரகேரளம்புதூர் தாசில்தார் வெங்கடேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார் ‌. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கீர்த்திகா, சுரண்டை பேரூராட்சி நிர்வாக அதிகாரி வெங்கட கோபு, தலைமையாசிரியர் செளந்தரராஜன் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ‌பங்களாச்சுரண்டை பள்ளியில் இருந்து கீழச்சுரண்டை, அரண்மனை, அண்ணா சிலை, காமராஜர் சாலை, செங்கோட்டை ரோடு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும், துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும் வந்தனர்.

பேரணியின் போது டெங்கு பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பாவூர்சத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கீர்த்திகா அறிவுரைகள் வழங்கினார். பேரணியில் சுரண்டை வருவாய்ஆய்வாளர் மாரியப்பன், விஏஓ.,கள் வெள்ளபாண்டி, ஆறுமுகம், கருப்பசாமி, கிராம உதவியாளர்கள் ஜேம்ஸ் கற்பகம், பரமசிவபாண்டி மாரியம்மாள் என்எஸ்எஸ் அலுவலர் அதிசயராஜ், ஆசிரியர்கள் சௌந்தர், சாமுவேல் சுகுமார் செல்வராஜ், விக்டர், ஜோயல், ஜெபஎபனேசர், வேல்சாமி ,செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 March 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  3. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  4. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  7. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  8. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  9. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!