/* */

துணை ராணுவப்படை,போலீசார் கொடிஅணிவகுப்பு

துணை ராணுவப்படை,போலீசார் கொடிஅணிவகுப்பு
X

ஆலங்குளத்தில் துணை ராணுவப்படை வீரர்கள் மற்றும் போலீசார் கொடிஅணிவகுப்பு நடத்தினார்கள்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஆலங்குளத்தில் துணை ராணுவப்படை வீரர்கள் , போலீசார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது. ஆலங்குளம் டிஎஸ்பி., பொன்னி வளவன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் போலீஸ் ஸ்டேஷனில் அணிவகுப்பு தொடங்கி தென்காசி சாலை, அம்பாசமுத்திரம் சாலை, புதுப்பட்டி, மருதம்புத்தூர், ஒடமறிச்சான், உடையாம்புளி, மாறந்தை, சிவலார்குளம், அய்யனார்குளம், நெட்டூர், மருதப்பபுரம் ஆகிய கிராமங்களுக்கு அணிவகுப்பு சென்றனர்.இந்த அணிவகுப்பில் துணை ராணுவப்படை கமாண்டர் முகேஷ், இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், ராஜகுளோரி, அங்கையற்கண்ணி, ரகுராஜன், சப்இன்ஸ்பெக்டர்கள், பெண் காவலர்கள் துணை ராணுவப்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 13 March 2021 10:45 AM GMT

Related News