/* */

வேட்பாளரை மாற்ற அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம்

வேட்பாளரை மாற்ற அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம்
X

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி கீழப்பாவூரில் அதிமுக வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று மாலை அதிமுக வெளியிட்டது. இந்நிலையில் இன்று காலை தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளர் முன்னாள் எம்.பி.மனோஜ் பாண்டியனை மாற்ற கோரி கீழப்பாவூரில் அதிமுக கட்சியினரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளியூர்காரரான மனோஜ் பாண்டியனை மாற்றி விட்டு, ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட உள்ளூர்காரரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். மேலும் கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மனோஜ் பாண்டியன் ஊருக்கே வரவில்லை. எனவே தொகுதிக்கு பரிட்சயப்பட்ட நபரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் இல்லையெனில் தீக்குளிக்க போவதாக அக்கட்சியினரே தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 11 March 2021 8:37 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  5. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  6. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  7. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  9. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  10. திருவள்ளூர்
    பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க...