Begin typing your search above and press return to search.
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனவர் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே விபத்தில் காயமுற்ற முதியவர் உயிரிழந்தார்.
ஊத்துமலை அருகே அண்ணாமலைபுதூரைச் சேர்ந்தவர் சம்முத்தான் (70). கடந்த மாதம் 18ம் தேதி தென்காசி மாவட்டத்தில் நடந்த முதல்வர் பங்கேற்ற பிரசார கூட்டத்திற்கு ஊர்க்காரர்களுடன் வேனில் பயணித்தார். சுரண்டை அருகே பரங்குன்றாபுரம் விலக்கு பகுதி அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய வேன் விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் பயணித்தோரில் சம்முத்தான் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் நேற்று முன்தினம் (2ம்தேதி) மாலை டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய சம்முத்தான், திடீரென இறந்தார். இதுகுறித்து சுரண்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.