Begin typing your search above and press return to search.
ஆலங்குளத்தில் லாரி மோதி முதியவர் பலி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஐந்தாங்கட்டளையைச் சேர்ந்தவர் அன்புராஜ் (வயது 60). இவர் நேற்று அதிகாலையில் ஆலங்குளம்-தென்காசி ரோடு பெட்ரோல் பங்க் அருகில் சாலையை கடக்க முயன்றார். அப்போது கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக அன்புராஜின் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆலங்குளம் காவல்துறையினர் விரைந்து சென்று, இறந்த அன்புராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான தூத்துக்குடி அருகே முடிவைத்தானேந்தலைச் சேர்ந்த சண்முகசுந்தரத்திடம் (47) விசாரித்து வருகின்றனர்.