/* */

போலி பீடிகளை பதுக்கி வைத்திருந்த நபர் கைது

போலி பீடிகளை பதுக்கி வைத்திருந்த நபர் கைது
X

ஆலங்குளம் அருகே போலி பீடிகளை பதுக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் பீடி கம்பெனி ஒன்றில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார், ஆலங்குளம் அருகே அவரது கம்பெனி லேபிள்கள் உபயோகித்து போலியாக பீடிகள் தயாரிப்பதாக தகவல் கிடைத்துள்ளது, கிடைத்த தகவல் உண்மைதானா என சரவணன் மற்றும் நிறுவன ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது அங்கு போலி பீடிகள் மற்றும் லேபிள்களை பதுக்கி வைத்திருந்த ராமசுப்பு என்ற நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதுகுறித்து சரவணன் சுரண்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையிினர் விசாரணை செய்து மேற்படி போலி பீடிகளை பதுக்கி வைத்திருந்த ஆலடிப்பட்டி பகுதியை சேர்ந்த ராமசுப்பிரமணியன்(52) என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து சுமார் 56,000 ரூபாய் மதிப்புள்ள போலி பீடிகள் மற்றும் லேபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது

Updated On: 6 Feb 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?