/* */

மலை போன்ற தீயில் இறங்கிய பக்தர்கள்

மலை போன்ற தீயில் இறங்கிய பக்தர்கள்
X

தென்காசி மாவட்டம் அருணாப்பேரி அழகு முத்துமாரியம்மன் கோவில் கொடை விழாவில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த தீயில் பக்தர்கள் பூக்குழி இறங்கினர் .

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரியில் அமைந்துள்ளது அழகு முத்துமாரியம்மன் கோவில். மிகவும் பழைமை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டு தோறும் 10 நாட்கள் கொடை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான கொடை விழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள் தோறும் காலை, மாலை இரு வேளையிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுடன், சப்பரம் வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் தொடங்கி காலை 5 மணி வரை நடைபெற்றது. மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருக்கும் நெருப்பில் பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். தற்போது கொரோனா காலம் என்பதால் வெளியூர் பக்தர்களுக்கும், கச்சேரிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நடைபெற்ற பூக்குழி இறங்கும் நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 20 Jan 2021 7:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?