/* */

உலகை திரும்பி பார்க்க வைத்த தமிழச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

பொருளாதார நெருக்கடியில் இருந்து காப்பாற்றியதால் உலகை திரும்பி பார்க்க வைத்த தமிழச்சியாக மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளார்.

HIGHLIGHTS

உலகை திரும்பி பார்க்க வைத்த தமிழச்சி  மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
X

மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்.

அமெரிக்காவின் கமலா, நான்சி பெலோசி, நியூசிலாந்தின் ஜெசிந்தா என ஒரு சில அரசியல் பெண்களுக்கு தனி செல்வாக்கு உண்டு. அந்த வரிசையில் முதன் முதலில் ஒரு தமிழச்சி இடம் பிடித்திருக்கின்றார்.உலகம் அவரை உற்று கவனித்து பல விஷயங்களில் பாராட்டி கொண்டிருக்கின்றது. அவர் திருச்சியை சேர்ந்த தமிழச்சி. வெளிநாட்டில் படித்து கணவருடன் பெங்களூரிலும் ஐதராபாத்திலுமாக‌ வசித்து பள்ளி நடத்திய பொழுது சுஷ்மாவின் பார்வையில்பட்டு தேசிய பணிக்கு வருகின்றார். சுஷ்மாவின் அனுபவம் அவர் தனக்கு மிக சரியான வாரிசாக இருப்பார் என்பதை சொல்லிற்று.

காலம் அதை உண்மை எனவும் காட்டிற்று, நாட்டுபற்றாளர் நம்பிக்கை எதுவும் பொய்த்ததில்லை. நிர்மலா சீத்தாராமன். உலகில் விரல்விட்டு எண்ணும் மிக உயர்ந்த வரிசை பெண்களில் ஒருவர், இன்று இந்திய நிதியமைச்சர்

அவர் முதலில் வர்த்தகத்துறை இணை அமைச்சராகத்தான் பதவியேற்றார், அதில் அவர் செய்த மிக நுணுக்கமான சீர்திருத்தமே இந்திய ஜவுளிதுறைக்கு அஸ்திவாரமான நூல் சந்தையினை சீன பிடியில் இருந்து விடுவித்தது.

அவர் செய்த சீர்திருத்தங்கள் அன்றே சீன இறக்குமதிக்கு கடிவாளமிட்டு இந்திய உற்பத்திக்கு முன்னுரிமை பெற வழிசெய்தது. அவரின் திறமையினை கண்டு மிக முக்கியத்துவமான ராணுவ அமைச்சர் பதவியினை மோடி கொடுத்திருந்தார். மகா சிரமமான பணியும் அதுவே.

உலகில் ஆயுத தொழில் கச்சா எண்ணெய், தங்கம் எல்லாவற்றையும் விட சக்தி வாய்ந்தது. அள்ள அள்ள குறையா பணம் அது, கொட்டி கொடுக்க கம்பெனிகள் குனிந்து நிற்கும் துறை அது. அதில் பணத்துக்கு அப்பாற்பட்டு நிற்க தனி குணம் வேண்டும், நிர்மலா அதில் வென்றார்

ராணுவ அமைச்சர் ஒரு நாட்டில் ஆயுதம் கொள்முதல் செய்யும் பொழுது ஏகப்பட்ட அரசியல் இம்சைகள் நடக்கும். சர்வதேச கம்பெனிகள் இந்தியாவில் இருக்கும் தங்கள் அல்லக்கை கட்சிகள் மூலமாக பல இடைஞ்சல் கொடுக்கும், அதையும் தாண்ட வேண்டும்.

நிர்மலா காலத்தில் அதை அவர் திறம்பட செய்தார், அவரின் அதி உச்ச சாதனை அப்பொழுது ரஷ்யாவிடம் எஸ் 400 சாதனத்துக்கு கையெழுத்திட சென்றது. அமெரிக்க மிரட்டல் இதர சிக்கல்களை சமாளித்து அந்த ஒப்பந்தத்தில் இந்தியா சார்பாக நிர்மலா கையொப்பமிட்டபொழுது உலகமே அவரை கூர்ந்து கவனித்தது.

( இன்றும் அமெரிக்கா அந்த ஆயுத கொள்முதலுக்கு தடைவிதிக்காமல் விலக்கு அளிக்க அன்றே நிர்மலா செய்த சில ஏற்பாடுகளும் காரணம் )

சில பத்திரிகைகள் அன்றே அவரை இரண்டாம் இந்திரா காந்தி என எழுதின. ரபேல் விமானத்தின் சர்ச்சைகளை தாண்டி, ஊழல் இல்லை என நிரூபித்து அவைகளை இந்தியா பெற முழு காரணமாக இருந்தார் நிர்மலா, அது மிகபெரும் சாதனை.

அவர் காலத்தில் ராணுவம் முழு பலம் பெற்றது. ஒரு கட்டத்தில் புல்வாமா தாக்குதல் நடக்க, அப்பொழுது பாதுகாப்பு அமைச்சராக இருந்த நிர்மலாவின் கடும் நடவடிக்கையில் இந்திய விமானங்கள் பாகிஸ்தானை தாக்கின. எத்தனையோ முறை முன்பு அடிவாங்கிய இந்தியா நிர்மலா தலைமையில் திருப்பி அடித்த பொழுது உலகமே கைதட்டியது.

நிர்மலா சீத்தாராமன் பாதுகாப்புதுறையில் செய்த சீர்திருத்தமே இப்பொழுது சீன நெருக்கடியில் தேசத்தை வலுவாக காத்து கொண்டிருக்கின்றது. நிர்மலா பதவிக்கு வந்த நாளிலிருந்து இலங்கை கடற்படை அடக்கி வாசித்தது என்பது இன்னொரு விஷயம்.

முதல் ஆட்டத்தில் தேசத்தை பலமான ராணுவபாதைக்கு இழுத்து சென்ற நிர்மலா அடுத்த ஆட்டத்தில் பொருளாதாரதுறை அமைச்சரானார். ஒரு தமிழ்பெண் தொடர்ந்து அமைச்சராக அதுவும் மகா முக்கிய அமைச்சராக பதவியேற்றது இதுதான் முதல்முறை.

பொருளாதாரத்தில் பலத்த சீர்திருத்தம் கொண்டு வந்தார். பற்பல விஷயங்களில் அவர் செய்த மாறுதல் நல்ல பலனை கொடுத்திருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக உலகமே அதிரும் வண்ணம் கொரோனா தாக்கி அமெரிக்கா போன்ற நாடுகளே திணறியபொழுது இந்திய பொருளாதாரத்தினை தாங்கி நிற்கின்றார்.

அதுவரை நிர்மலா என்ன கிழித்தார் என்றவர்கள் அவசரகால நிதியாக கொரோனா காலத்தில் 20 லட்சம் கோடியினை அவர் அறிவித்தபொழுது வாய்மூடி நின்றார்கள். அந்த 20 லட்சம் கோடியில் தான் இந்தியா கொரோனா காலத்திலும் பொருளாதாரத்தை உயிரோடு வைத்திருக்கின்றது.

அந்நேரம் மோடி விவசாயிகளுக்கு அறிவித்த `19 ஆயிரம் கோடி நலதிட்டமும் நிர்மலாவின் மிகச் சிறந்த நிர்வாகத்தில் ஒன்று. சீனாவும், அமெரிக்காவும், ஜப்பானும், தென்கொரியாவுமே தடுமாறி நிற்கும் பொழுது இந்திய பொருளாதாரம் தாக்குபிடித்து நிற்கும் அதிசயம் நிர்மலாவால் நடந்து கொண்டிருக்கின்றது.

வங்கிகளை இணைத்தது, வாராகடன்களை மீட்க வழிவகை செய்தது என நிர்மலா செய்து கொண்டிருக்கும் சாதனைகள் ஏராளம். சிக்கலான நேரத்தில் ஆட்சிக்கு வந்த நிர்மலா, மிக அழகாக நாட்டை நடத்தி செல்கின்றார்.

சீனா நெருக்கடிக்கு உள்ளான இந்நேரம் சீனாவினை விட்டு வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவில் உள்ளே இழுக்க அனைத்து காரியங்களையும் செய்து கொண்டிருகின்றார் நிர்மலா. கொரோனாவில் இருந்து மீண்ட உலகத்தை உக்ரைன் யுத்தம் முடக்கினாலும் நிர்மலாவின் வழிகாட்டலில் தேசம் நிலைத்து நிற்கின்றது.

ஆசியாவில் குறிப்பாக தெற்காசியாவில் மிகபெரிய பொருளாதார முடக்கம் ஏற்பட்டிருக்கின்றது. பர்மா, வங்கதேசம், தாய்லாந்து, இந்தோ சீன நாடுகளெல்லாம் பெரும் குழப்பத்தில் சிக்கியிருக்கின்றன‌. இலங்கை மக்கள் புரட்சிக்கு உள்ளாகி மிகபெரிய இக்கட்டில் இருக்கின்றனர்.

பாகிஸ்தானும் மீளமுடியா நெருக்கடிக்கு தள்ளப்பட்டு தவிக்கின்றது. இன்று அந்த பிராந்தியத்தில் அரசியல் மற்றும் பொருளாதார பலமுள்ள நாடுகள் இரண்டு தான் , ஒன்று சீனா இன்னொன்று இந்தியா.

சீனாவின் அடக்குமுறையான அரசின் தன்மையே வேறு, அங்கு தேர்தல் இல்லை கம்யூனிச அரசின் பேச்சை தவிர வேறு எதையும் சொல்லும் ஊடகம் இல்லை, டிவிட்டர் முகநூல் என எதுவுமில்லை பெரும் இரும்புதிரை நாடு அது

அங்கு 1975 முதல் பொருளாதார பாய்ச்சல் அதிகம், அந்நிய செலாவணி கையிருப்பு அதிகம் அதை கொண்டு எப்படியோ சமாளிக்கின்றார்கள் என்றாலும் முந்தைய ஆண்டைவிட அவர்கள் பொருளாதாரம் சரிந்திருப்பது நிஜம்.

ஆனால் இந்தியா அப்படி அல்ல, அது ஜனநாயக நாடு இங்கு கட்சிகளும் தொழிற்சங்கங்களும் ஓயாத இரைச்சலும் சத்தமும் குழப்பமும் உண்டு. அந்நிலையிலும் மிக வலுவான பொருளாதாரத்தை கொண்டு ஆசியாவின் வலுவான நாடு என அது இன்று தனித்து நிற்க இந்திய நிதியமைச்சர் மிகபெரும் காரணம். கொரோனாவில் இருந்து தேசத்தை மீட்க அவர் அறிவித்த 19 லட்சம் கோடி நிதியில்தான் இப்பொழுதும் மாநில அரசுக்கு வட்டியில்லா கடன் என அவர் அறிவித்ததில் தான் தேசம் தலைநிமிர்ந்து நிற்கின்றது

மிக சரியான நேரத்தில் சரியான இடத்தில் அமர்ந்து தேசத்தை காத்திருக்கின்றார் நிர்மலா சீத்தாராமன்

இன்று உலக நாடுகள் ஜெர்மனியினை நிமிர வைத்த ஏஞ்சலோ மார்கலுக்கு நிகராக நிர்மலா சீதாராமனை கொண்டாடுகின்றன‌. நிர்மலா முதலமைச்சரின் மகளோ மருமகளோ அல்ல, அவர் குடும்பம் அரசியலில் இருந்ததுமில்லை எப்படி இவ்வளவு பெரும் இடத்தை பெற்றார் நிர்மலா. இன்று நிதியமைச்சராக அவரை தெரியும் ஆனால் சிவகாசி, தூத்துக்குடி என பல இடங்களில் களப்பணி செய்து நாடு முழுக்க ஒரு பரதேசியாய் அலைந்து தேசத்தை முழுக்க படித்துத்தான் அவர் அந்த இடத்துக்கு வந்தார் என்பது பலருக்கு தெரியாது.

கை நிறைய வளையலும், வகை வகையான உடையும், முகம் நிறைய ஒப்பனையுமாக பெண் எம்.பி.க்கள் (தமிழக எம்.பி.க்களும்)வலம் வரும் பாராளுமன்றத்தில் நூல் சேலையும் ஒப்பனையற்ற முகமுமாக, வயலுக்கு வேலைக்கு செல்லும் பாமர பெண்போல் வரும் அந்த நிர்மலாவின் எளிமை அளப்பறியது. எல்லா கேள்விக்கும் எல்லா பதிலையும் நுனியில் வைத்திருக்கும் அந்த துல்லியம் அளப்பறியது.

ஒரு விஷயம் அவரின் எதிரிகளும் ஒப்புகொள்ள கூடியது, அது அவரின் நேர்மை. தொடர்ந்து அமைச்சராக அதுவும் மகா சக்திவாய்ந்த பதவியின் அமைச்சராக இருந்தும் ஒரு துளி தங்கம் கூட அவர் அணிந்தவரில்லை. வித விதமான கார்களில் வந்து வகை வகையான சொத்துக்களை அவரும் வளைத்ததில்லை.

அவர் கண்ணசைத்தால் எத்தனையோ பிரமாண்ட கம்பெனிகளின் பங்குகள் அவர் காலடிக்கு வந்திருக்கும், திருப்பதி பெருமாளை விட கோடிகணக்கான தங்கம் அவர்முன் குவிந்திருக்கும்.

ஆனால் அதையெல்லாம் தாண்டி நாட்டுப்பற்று எனும் ஒரே ஒரு நோக்கில் உழைத்து கொண்டிருக்கின்றார். அவரின் குடும்பத்தாரை எங்காவது காணமுடியுமா? அரசியல் அழிச்சாட்டியத்திலோ இல்லை வேறு விவகாரங்களிலோ அவர்கள் தென்பட்டார்களா? இல்லை. நிர்மலா இந்தியாவினை காத்து நிற்கும் சக்தி, பராசக்தியின் வடிவமாக தான் நாட்டுப்பற்றாளர்களால் பார்க்கப்படுகிறார்.

Updated On: 21 Aug 2022 3:25 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  2. ஆன்மீகம்
    பிறப்பு ஜாதகம் எப்படி எழுதறாங்க தெரியுமா..?
  3. வீடியோ
    CBI Raid-க்கு தேதி குறித்து கொடுத்த திமுக !#annamalai #annamalaibjp...
  4. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  6. வீடியோ
    மத்தியில் கூட்டணி ஆட்சி ! பேரம் பேசிய திமுகவினர் !#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  8. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  9. வீடியோ
    🔴LIVE: கன்னியாகுமரியில் சீமான் தேர்தல் பிரச்சாரம் #seeman #live
  10. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...