/* */

தமிழ் அகராதியியல் நாள் விழா: விருதுகள் வழங்கி கவுரவிப்பு

தமிழ் அகராதியியல் நாள் விழாவில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் சண்முகம் பங்கேற்று விருதுகளை வழங்கினார்.

HIGHLIGHTS

தமிழ் அகராதியியல் நாள் விழா: விருதுகள் வழங்கி கவுரவிப்பு
X

சென்னை, தரமணியில் நடைபெற்ற விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது.

"தமிழ் அகராதியியலின் தந்தை" என்று போற்றப்படும் வீரமாமுனிவரின் தமிழ்த்தொண்டைப் போற்றும் வகையில், அவரது பிறந்தநாளான நவம்பர் 8ஆம் நாளைத் "தமிழ் அகராதியியல் நாள் விழா"வாகக் கொண்டாட தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தால், "தமிழ் அகராதியியல் நாள் விழா" கொண்டாடப்பட்டுவருகிறது.

அந்தவகையில் 2022 ஆம் ஆண்டுக்கான "தமிழ் அகராதியியல் நாள் விழா" சென்னை, தரமணியில் அமைந்துள்ள "உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்" 08.11.2022ஆம் நாள் காலை சிறப்புற நடைபெற்றது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலுள்ள, பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடத்தில் நடைபெற்ற இவ்விழாவில், முதல்வரின் செயலாளரும், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் அரசு செயலாளருமாகிய முனைவர் ம.சு. சண்முகம் பங்கேற்று, 2021 ஆம் ஆண்டுக்கான "தூயதமிழ்ப் பற்றாளர் விருது", "தூயதமிழ் ஊடக விருது", "நற்றமிழ்ப் பாவலர் விருது" ஆகிய விருதுகளை வழங்கி, 58அறிஞர்களின் கருத்துச் செறிவார்ந்த கட்டுரைகள் அடங்கிய 2022 ஆம் ஆண்டுக்கான "அகராதி ஆய்வு மலரை" வெளியிட்டு முன்னிலையுரையாற்றிச் சிறப்பித்தார்.

முதல்வரின் செயலாளரும், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் அரசு செயலாளருமாகிய முனைவர் ம.சு. சண்முகம் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், தஞ்சை - தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ம. இராசேந்திரன் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.

விழாவில், அகராதியியல் அறிஞர் முனைவர் கு. அரசேந்திரன், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி. சந்தோசம், கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் முனைவர் மதன் கார்க்கி உள்ளிட்ட தமிழாளுமைகள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் வரவேற்புரை வழங்க, விழாவின் நிறைவில் தமிழ்வளர்ச்சி இயக்கக இயக்குநர் முனைவர் ந. அருள் நன்றியுரை கூறினார்.

விழாவின் தொடக்கமாக, காலை 9.30 -10.30 வரை, மயூரி நிகழ்த்துக் கலைக்கழகம், கலைமாமணி விசயலட்சுமி பூபதி வழங்கும் "எங்கும் தமிழ்!" கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில், அரசு அலுவலர்கள், அகராதியியல் வல்லுநர்கள், விருதாளர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவ-மாணவியர் மற்றும் தமிழார்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

விழாவில் விருதுபெற்றோர் விவரங்கள்:

தூய தமிழ்ப் பற்றாளர் விருது -2021

செங்கல்பட்டு மாவட்டம்- "வாசல்" எழிலன் (எ) சு. கந்தசாமி

சென்னை மாவட்டம் - தாமரைப் பூவண்ண ன் (எ) க. கோவிந்தராசு

தருமபுரி மாவட்டம் - பாவலர் பெரு.முல்லையரசு

திண்டுக்கல் மாவட்டம் - பண்ணை கோமகன் (எ) தே.இரா.கோபால்

கள்ளக்குறிச்சி மாவட்டம் - செ.வ. மதிவாணன்

காஞ்சிபுரம் மாவட்டம் - புலவர் வெற்றிச் செழியன்

கரூர் மாவட்டம் - முனைவர் கடவூர் மணிமாறன்

பெரம்பலூர் மாவட்டம் - மு. பரமசிவம் (எ) விளவை செம்பியன்

இராமநாதபுரம் மாவட்டம் - செல்வன் ப. சிவபிரகதீசு

சிவகங்கை மாவட்டம் - பழ. பாசுகரன்

தேனி மாவட்டம் - ஆ. சின்னச்சாமி

திருவள்ளூர் மாவட்டம் - ச.ம. மாசிலாமணி

திருச்சிராப்பள்ளி மாவட்டம் - செல்வன் பூ. இரவிக்குமார்

நற்றமிழ்ப் பாவலர் விருது -2021

மரபுக் கவிதை - கருவூர் கன்னல்

புதுக் கவிதை - முனைவர் பெ. தமிழ்ச்செல்வி குணசேகரன்

தூய தமிழ் ஊடக விருது - 2021

அச்சு ஊடகம்: அறிவியல் ஒளி (திங்களிதழ்) - நா.சு. சிதம்பரம்

காட்சி ஊடகம்: இணையம் (வலையொளி) - முனைவர் மு. இளங்கோவன்

Updated On: 8 Nov 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  2. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  5. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  6. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  7. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  8. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  9. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...