/* */

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு

தஞ்சை அருகே, பள்ளி மாணவி தற்கொலை செய்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு
X

தஞ்சை மாவட்டம், மைக்கேல்பட்டி தனியார் கிறிஸ்தவ பள்ளி உள்ளது. இங்கு படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த 12ம் வகுப்பு, மாணவி லாவண்யா, கடந்த சில நாள்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி, பள்ளி வார்டன் மற்றும் நிர்வாகம், மதம் மாற கட்டாயப்படுத்தியால் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாணவி பேசும் வீடியோவும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, பாஜக போராட்டமும் நடத்தி வருகிறது.

மாணவி லாவண்யா தற்கொலைக்கு கட்டாய மதமாற்ற துன்புறுத்தல் காரணம் கிடையாது என, மாவட்ட கல்வி அலுவலர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது

இதனிடையே, மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் கூறி மாணவியின் தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.

Updated On: 31 Jan 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?
  2. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!
  3. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  4. ஈரோடு
    தாளவாடி அருகே அரசு பேருந்து பயணிகளை மிரட்டிய ஒற்றை காட்டு யானை
  5. லைஃப்ஸ்டைல்
    CIBIL ஸ்கோர் ரொம்ப குறைந்திருந்தால்...? - அதை உயர்த்த இதை எல்லாம்...
  6. லைஃப்ஸ்டைல்
    தாடி வெள்ளை ஆயிடுச்சேன்னு கவலைப்படறீங்களா?
  7. ஆன்மீகம்
    பிரம்ம முகூர்த்தத்தில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றுவதால் இத்தனை...
  8. கல்வி
    Husky என்ற சொல்லின் பொருள் அறியலாம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    காலில் கருப்பு கயிறு கட்டுவதன் பின்னணியும் பயன்களும்
  10. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்திவைப்பு