/* */

தூக்கிட்டு தற்கொலை செய்ததற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி போராட்டம்

இறப்பிற்கு கல்லலை சேர்ந்த சிலர் காரணம் எனவும்அவர்களை கைது செய்ய வலியுறுத்தி , கல்லல் - பரமக்குடி சாலையில் மறியல் நடந்தது

HIGHLIGHTS

தூக்கிட்டு தற்கொலை செய்ததற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி போராட்டம்
X

 கல்லல் - பரமக்குடி மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே சடலத்தை வைத்து,உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவரின் இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சடலத்தை சாலையில் குறுக்கே வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த கல்லலை சேர்ந்தவர் நாச்சியப்பன்.பிரபல பேக்கரி நிறுவனத்தின் உரிமையாளரான இவர், இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடற்கூராய்வுக்குப்பின் சொந்த ஊரான கல்லலுக்கு உடல் கொண்டு வரப்பட்ட நிலையில், நாச்சியப்பனின் இறப்பிற்கு காரணம் கல்லலை சேர்ந்த சிலர் எனவும்,அவர்களை கைது செய்தால்தான் உடலை பெற்றுக் கொள்வோம் எனக் கூறி, கல்லல் - பரமக்குடி மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே சடலத்தை வைத்து,உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வருவாய் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடம் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.


Updated On: 27 Jan 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...