/* */

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: நலத்திட்ட உதவிகள் அளிப்பு

வேளாண் பொறியியல் துறை மீன்வளத்துறை சார்பில் 11 விவசாயிகளுக்கு ரூ.35.28 இலட்சம் மதிப்பீட்டில் மானியம் அளிக்கப்பட்டது

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: நலத்திட்ட உதவிகள் அளிப்பு
X

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் ஆட்சியர் மதுசூதன்ரெட்டி

சிவகங்கையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வேளாண் பொறியியல் துறைமற்றும் மீன்வளத்துறையின் சார்பில் மொத்தம் 11 விவசாயிகளுக்கு ரூ.35.28 இலட்சம் மதிப்பீட்டில் மானியத் தொகைக்கான ஆணைகள்மற்றும் 2000 மீன்குஞ்சு வகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், விவசாயிகள் சோலார் அமைப்புடன் கூடிய விளக்குப் பொறி மானியத்தில் வழங்குதல் உழவு மானியம் வழங்குதல், பின்ஏற்பு மானியம் வழங்குதல்,துணை விதை விற்பனை அமைத்தல், சொட்டு நீர்பாசனம் மானியம் வழங்குதல், உழவர் சந்தை அமைத்தல்,குளிர்பதன கிடங்கு அமைத்தல்,கண்மாய் கருவேல் மரங்களை ஏலமிடுதல்,இலவச வீட்டுமனை வழங்குதல், கண்மாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்,சீல்டு கண்மாய் மூலம் தண்ணீர் வழங்குதல், சருகனி பிர்க்காவில் உள்ள 29 கண்மாய்களை மணிமுத்தாறு வடிநில கோட்ட கட்டுப்பாட்டில் கொண்டு வருதல், வெட்டிவயல் கண்மாய் வரத்துக்கால் குறுக்கே பாலம் கட்டுதல், செங்குளிப்பட்டி கண்மாய் கரை மடைகள் மற்றும் வரத்துக்கால்வாய் சீரமைத்தல்,வைகை ஆற்றிலிருந்து உபரி நீர் வழங்குதல், புல்லுக்கோட்டை கண்மாய் தடுப்புசுவர் கட்டுதல்,வைகை ஆற்றிலிருந்து சோமாத்தூர் கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்குதல், வைகை வலது பிரதான கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தை சரிசெய்து தருதல், கண்மாய் பெரியமடையை பலப்படுத்துதல்,மின் இணைப்பு வழங்குதல்,

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் மற்றும் பழுதான மின்கம்பத்தினை சரிசெய்தல்,மின் இணைப்பு கூடுதல் பீடர் மறறும் மின்கம்பிகள் பொருத்துதல்,மழைநீர் வரத்துக்கால்வாய் இருபக்கமும் தடுப்புச்சுவர் கட்டுதல், தார்சாலை அமைத்தல்,குடிநீர் ஊரணியில், முள்வேலி மற்றும் வரத்துக்கால்வாய் தூர்வாருதல்.கிராமச்சாலையை சரிசெய்தல், பழுதான சாலை மற்றும் தடுப்புச்சுவர் அமைத்தல்.ஊராட்சி சாலையை நெடுஞ்சாலைத்துறை சாலையாக தரம் உயர்த்துதல், மழைநீர் தேங்கும் இடத்தில் மண் அடித்தல்.சேதமடைந்த கழிவுநீர் வாய்க்காலை சீரமைத்தல்,

புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தல் பாலம் கட்டுதல் விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை கட்டுபடுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.விவசாயிகளின் தகுதியுடைய கோரிக்கைகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய கள ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவைகள் தொடர்பான மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை சமர்ப்பிக்கும்படியும் மாவட்ட ஆட்சித்தலைவர், துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், இக்கூட்டத்தில் விவசாயிகள் எடுத்துரைத்த கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் புள்ளி விபரங்களுடன் விரிவாக இக்கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர், வேளாண் தொழிலை உழவர்கள் எவ்வித இடையூறு இன்றியும் தேவையான அனைத்து வசதிகளுடன் மேற்கொள்ளும் பொருட்டு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள நீர் நிலையிலுள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்றி, பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாத்திடவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தினை பாதுகாத்திடவும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகள் அரசின் திட்டங்களின் பயன்களை முழுமையாக பெற்றிடவும், தேவையான சான்றிதழ்களை வழங்கிடவும்,துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.மேலும்,

நில அளவைத்துறையினர் விவசாயிகள் கோரும் அளவீட்டுப்பணியினை விரைந்து மேற்கொள்ளவும், விவசாயிகளுக்கான மின் விநியோகங்களை சீரான முறையில் வழங்கிடவும், தேவையான உரங்களை இருப்பு வைத்திடவும், கண்மாய்களில் உள்ள மடைகள் தடுப்புச்சுவர்கள் பழுதடைந்து இருப்பின் விரைந்து சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், மேலும் ,புதிய தடுப்பணைகள் கட்டித்தரவும், வங்கிகளின் மூலம் கடனுதவிகள் வழங்கி, வேளாண் சார்ந்த புதிய தொழில் தொடங்கிட உறுதுணையாக இருந்திடவும், கடனுக்குரிய மானியத்தொகையினை தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வழங்கிடவும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள், ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், வேளாண் பொறியியல் துறையின் சார்பில், வேளாண் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 10 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.3527744 மதிப்பீட்டில் வழங்கப்பட்ட வேளாண் இயந்திரங்களின் மானியத் தொகைக்கான ஆணைகளையும் மற்றும் மீனவளத்துறையின் சார்பில் 1 விவசாயிக்கு 2000 மீன்குஞ்சுகள் வகைகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இரா.சிவராமன், மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்.மணிபாஸ்கரன், வருவாய் கோட்டாட்சியர்கள் கு.சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), வேளாண்மைத்துறை இணை இயக்குநர்(பொ) ஆர்.தனபாலன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) செல்வி.சர்மிளா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Nov 2022 1:30 PM GMT

Related News