Begin typing your search above and press return to search.
காற்றும் நீரும் பொதுச்சொத்து : அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு
காற்றும், நீரும் பொதுச்சொத்து; அதனை நாம் வருங்கால சந்ததியினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்
HIGHLIGHTS
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில், தமிழ்நாடு அரசு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக மழைநீர் சேமிப்பு, மற்றும் சேகரிப்புக்கான கட்டமைப்புகளை பராமரிக்கும் முறைகள் குறிதது பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது. இதற்கான காணொலி காட்சி வாகனத்தை மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி தலைமையில் நடந்த நிகழ்வில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே ஆர். பெரியகருப்பன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இதில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், மொத்த வர்த்தக அணி துணை அமைப்பாளர் உதயம் சண்முகம், நகர செயலாளர் கார்த்திகேயன், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக செயலாளர் சந்திரசேகரன், உதவி நிர்வாக பொறியாளர் செல்வம் , துணை மேலாளர் குணசேகரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.