/* */

மதுராபுரியில் மீன்பிடி திருவிழா: குடும்பத்துடன் குவிந்த கிராம மக்கள்

மதுராபுரியில் மீன்பிடி திருவிழா கணவன் மனைவி குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக மீன்பிடித்து மகிழ்ச்சி.

HIGHLIGHTS

மதுராபுரியில் மீன்பிடி திருவிழா: குடும்பத்துடன் குவிந்த கிராம மக்கள்
X

மதுராபுரி வேங்கை பட்டியில் உள்ள தொட்டி காத்தான் கண்மாயில் இன்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. 

மதுராபுரியில் மீன்பிடி திருவிழா கணவன் மனைவி குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக மீன்பிடித்து மகிழ்ச்சி.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மதுராபுரி வேங்கை பட்டியில் உள்ள தொட்டி காத்தான் கண்மாயில் இன்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. வருடம் முழுவதும் நீர் பாசனம் நிறைவுபெற்று மீதி குளத்து தண்ணீரில் உள்ள மீன்களைப் பிடிக்க கிராமத்தார்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்வு மீன்பிடித் திருவிழா ஆகும்.

இந்த நிகழ்வில் கணவன் மனைவி குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக அந்த பகுதியை சேர்ந்த கிராமத்து மக்கள் மீன்களை இலவசமாக பிடித்துச் சென்று பயன்படுத்துவது வழக்கமாகும்.

இன்று காலை தொட்டிகாத்தான் கண்மாய் ஆயக்கட்டுகாரர்கள் கொடி அசைக்க அமைதியாக காத்திருந்த கிராமத்தினர் கண்மாயில் இறங்கி மீன் பிடிக்க துவங்கினர். இந்த மீன்பிடி திருவிழாவில் கட்சா, ஊத்தா, பரி , வலை உள்ளிட்ட கிராம மீன்பிடி உபகரணங்களை கொண்டு முழங்கால் அளவு கிடைக்கும் குளத்து தண்ணீரில் உள்ள மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.

கிடைத்த மீன்களைக் கொண்டு தங்களது வீடுகளில் மீன்குழம்பு கள் வைத்து உண்டு மகிழ்ந்தனர். இதனால் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மீன் குழம்பு வாசனை ஆளை மயக்கியது.

Updated On: 27 Jan 2022 6:09 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  5. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு
  10. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...