/* */

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்: அமைச்சர் பெரியகருப்பன் தொடக்கம்

Health Insurance Scheme -ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் காப்பீடு அட்டை மற்றும் மருத்துவர்களுக்கு பாராட்டுச்சான்று, கேடயம் வழங்கினார்

HIGHLIGHTS

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்: அமைச்சர் பெரியகருப்பன் தொடக்கம்
X

அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்(பைல் படம்)

Health Insurance Scheme -முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன், பிரதம மந்திரி ஆரோக்கிய திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவமனைகளைச் சார்ந்த மருத்துவர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியில் கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன், பிரதம மந்திரி ஆரோக்கிய திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவமனைகளை சார்ந்த மருத்துவவர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமை நடைபெற்றது.

இதில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பங்கேற்று பயனாளிகளுக்கு காப்பீடு அட்டை மற்றும் மருத்துவர்களுக்கு பாராட்டுச்சான்று, கேடயம் வழங்கி பேசியதாவது:

முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர், வழியில் செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களும் அனைத்துத்தரப்பு மக்களும் பாராட்டும் வண்ணம் உள்ளது. தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டமும் சமவளர்ச்சி பெறுவதற்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சர், தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் நலன் காக்கின்ற வகையில், அவர்களின் உடல் நலத்தினை பேணிக்காத்திடும் பொருட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், பல்வேறு மருத்துவம் சார்ந்த திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி, அதன்மூலம் பொதுமக்களின் நலனை பாதுகாத்து வருகிறார்கள்.

முத்தமிழறிஞர் கலைஞர் முந்தைய காலத்தில் செயல்படுத்தப்பட்ட குடிசையில்லா தமிழகமாக மாற்றிடும் வகையில், வீடு வழங்கும் திட்டம், சுகாதாரம், கழிப்பறை, டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம், மருத்துவ காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வேறு பெயர்களில் ஒன்றிய அரசு அளவிலும், தேசிய அளவிலும் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது.

அதில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் கடந்த 23.07.2009 அன்று துவங்கப்பட்டது. இத்திட்டம் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்துடன் ஒன்றிணைந்த 23.09.2018 முதல் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் திட்டப்பயனாளிகளுக்கு ரூ.5.00 இலட்சம் வரை மருத்துவச் சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் மூலம் 13 அரசு மருத்துவமனைகள் மற்றும் 16 தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டு மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த 1 வருடத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 8,553 பயனாளிகளுக்கு ரூ.8,88,72,675 மதிப்பீட்டில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனடையவதற்கு தகுதியாக ரூ.1,20,000 மற்றும் அதற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்கள் இத்திட்டத்தில் பயனடையலாம்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை தேவைப்படுவோர் குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களிடமிருந்து பெற்ற ஆண்டு வருமானச்சான்று ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மையத்தை அணுகி, இணையதளத்தில் பதிவு செய்து காப்பீட்டு அட்டை பெற்றுக் கொள்ளலாம்.

இது குறித்து விழிப்புணர்வுப் பணிகளும் மாவட்ட முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இதுதவிர மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 போன்ற திட்டங்களும் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, தமிழக மக்களின் நலன் காக்கப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் முறையாக அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 6 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், 7 காப்பீட்டு திட்ட தொடர்பு அலுவலர்கள் ஆகியோர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள், மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளுக்கு இனிப்பு மற்றும் பழவகைகள், மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் ஆகியவைகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, நகர்மன்றத் தலைவர் சே.முத்துத்துரை, இணை இயக்குநர் (மருத்துவம்) மரு.இளங்கோ மகேஸ்வரன், சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.ரேவதி, நகர்மன்ற துணைத்தலைவர் நா.குணசேகரன், நகாட்சி ஆணையர் லெட்சுமணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செந்தில்குமார், காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம் மற்றும் செவிலியர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 Oct 2022 9:58 AM GMT

Related News

Latest News

  1. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  2. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  3. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  4. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  5. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  6. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  7. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  8. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!
  9. குமாரபாளையம்
    பள்ளிபாளையம் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு..!
  10. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிப்பு