/* */

சிவகங்கை அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து கற்றல் முறை குறித்து மாணவர்களிடம் ஆட்சியர் கலந்துரையாடினார்.

HIGHLIGHTS

சிவகங்கை அருகே  அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியர் ஆய்வு
X

சிவகங்கை அருகே காளையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் ஆஷா அஜித்

சிவகங்கை அருகே உள்ள காளையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, காளையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியின் செயல்பாடுகள் குறித்தும், ஆசிரியர்கள் மாணாக்கர்களுக்கு, கற்பிக்கப்படும் முறை குறித்து, மாவட்ட ஆட்சித் தலைவர், வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து கற்றல் முறை குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

மேலும், மாணவர்களின் வருகை பதிவேடு, ஆசிரியர்களின் வருகை பதிவேடு, பள்ளியில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் இப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் நூலகத்தில் மாணக்கர்களின் பயன்பாடு, நூலகத்தில் புத்தக இருப்பு, கூடுதலாக நிறுவ வேண்டிய புத்தக வகைகள் ஆகியன குறித்தும் மற்றும் பள்ளி சமையலறையில் உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், மாவட்ட ஆட்சித்தலைவர், உணவருந்தி ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், கழிப்பறை வசதிகள் பயனற்ற நிலையிலுள்ள கட்டிடங்களை அப்புறப்படுத்துதல் மற்றும் புதிதாக கட்டப்பட வேண்டிய கூடுதல் கட்டிடங்கள் , கூடுதல் ஆசிரியர்களின் தேவை ஆகியன குறித்தும் அப்பள்ளியில் மேம்படுத்த வேண்டிய கூடுதல் தேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

Updated On: 30 Aug 2023 5:58 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...