/* */

காரைக்குடியில் முடிவுற்றப் பணிகளை தொடக்கி வைத்த அமைச்சர்கள்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், திட்டப்பணிகள் அமைச்சர்கள் கே.என். நேரு, கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

HIGHLIGHTS

காரைக்குடியில் முடிவுற்றப் பணிகளை  தொடக்கி வைத்த  அமைச்சர்கள்
X

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், திட்டப்பணிகள் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், காரைக்குடி நகராட்சிப்பகுதிக்கான ரூ.140.13 கோடி மதிப்பீட்டில், முடிவுற்ற பாதாள சாக்கடை திட்டப்பணிகளை தொடங்கி வைத்து - சிவகங்கை மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பில், ரூ.2507.77 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சிப் பகுதியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், முடிவுற்ற பாதாள சாக்கடை திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத், தலைமையில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி முன்னிலையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ தாஸ் மீனா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, ஆகியோர் கலந்து கொண்டு திட்ட விளக்கவுரையாற்றினர்.

இந்நிகழ்வில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர், சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். அந்தவகையில், காரைக்குடி நகராட்சிப் பகுதிக்கென, நகராட்சி நிர்வாகத்துறையின் மூலம் தற்போது ரூ.140.13 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

வீடுகள் மற்றும் வணிக நிறவனங்களிடமிருந்து சேகரிக்கப்படும் வீட்டு கழிவுநீர் நாளொன்றுக்கு நபர் ஒன்றுக்கு 110 லிட்டர் என்ற அளவில் கணக்கிடப்பட்டு, அதனடிப்படையில் கழிவுநீர் சேகரிப்பு குழாய்கள் வலை அமைப்பு வடிவமைக்கப்பட்டு, திட்ட செயலாக்கம் மற்றும் பராமரிப்புக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, பணிகள் நிறைவு நடைபெற்றுள்ளது.

மேலும், சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, காரைக்குடி, மானாமதுரை மற்றும் சிவகங்கை ஆகிய நகராட்சிகளில் ரூ.30.49 கோடி மதிப்பீட்டில் சாலைப்பணிகளும், ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகளும், ரூ.3.86 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்கான வாகனங்களும், ரூ.9.99 கோடி மதிப்பீட்டில் எல்.இ.டி. தெருவிளக்குகளும், ரூ.2.16 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகளும், ரூ.6.89 கோடி மதிப்பீட்டில் நீர்நிலைகள் மேம்பாட்டுப் பணிகளும், ரூ.1.77 கோடி மதிப்பீட்டில் பூங்காக்களும், ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் மின் மயானங்களும், ரூ.2.82 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையங்களும், ரூ.3.89 கோடி மதிப்பீட்டில் சந்தைகளும், ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் அலுவலகக் கட்டிடங்களும், ரூ.3.70 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையங்களும், ரூ.20.06 கோடி மதிப்பீட்டில் இதரப்பணிகளும் என ஆக மொத்தம் ரூ.91.56 கோடி மதிப்பீட்டில் நகராட்சிப் பகுதிகளுக்கு மட்டும் மேற்கண்டவாறு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடப்பாண்டில், கூடுதலாக பல்வேறு வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதேபோன்று, சிவகங்கை மாவட்டத்திலுள்ள 11 பேரூராட்சிகளில், ரூ.49.32 கோடி மதிப்பீட்டில் சாலைப்பணிகளும், ரூ.0.72 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகளும், ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்கான வாகனங்களும், ரூ.3.64 கோடி மதிபீட்டில், எல்இடி தெருவிளக்குகளும், ரூ.40.32 கோடி மதிப்பீட்டில் குடிநீர் பணிகளும், ரூ.22.73 கோடி மதிப்பீட்டில் நீர்நிலைகள் மேம்பாட்டுப் பணிகளும், ரூ.0.77 கோடி மதிப்பீட்டில் பூங்காக்களும், ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் மின் மயானங்களும், ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையங்களும், ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் அலுவலகக் கட்டிடங்களும், ரூ.1.95 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையங்களும், ரூ.25.49 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளும், ரூ.6.29 கோடி மதிப்பீட்டில் இதரப்பணிகளும் என ஆக மொத்தம் ரூ.163.35 கோடி மதிப்பீட்டில் பேரூராட்சிப் பகுதிகளுக்கு மட்டும் மேற்கண்டவாறு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், ரூ.1752.73 கோடி மதிப்பீட்டில் 16.12 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், 1 குடிநீர் திட்டம் செயலாக்கத்தில் உள்ளது. ரூ.360.00 கோடி மதிப்பீட்டில் 2.66 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் 1 குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இன்றையதினம் பாதாள சாக்கடைத் திட்டத்தின் மூலம் 1.39 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.140.13 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மொத்தம் ரூ.2252.86 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்று, கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான, தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் மொத்தம் ரூ.2507.77 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இந்நிகழ்ச்சியின், வாயிலாக, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காரைக்குடி நகர்மன்றத் தலைவர் ஆகியோர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக எடுத்துரைத்துள்ளனர். அக்கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் ,தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் தவிர்த்து, கூடுதலாக சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என, நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்

இந்நிகழ்வில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர், பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், தொலைநோக்குப் பார்வையுடன், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான மாநிலமாக தமிழகம் திகழ்ந்திடும் வகையில், சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்தவகையில், பல்வேறு சிறப்பு திட்டங்கள் மட்டுமன்றி, வளர்ச்சிப் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள், பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காரைக்குடி நகராட்சியானது முதல்நிலை நகராட்சியாகும். மொத்தம் 36 வார்டுகளை கொண்டதாகும். இந்நகராட்சிப் பகுதியில் உள்ள ஒவ்வொரு வார்டுகளிலும் பொதுமக்களுக்கு தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, மின் வசதி, சுகாதார வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளின் அடிப்படையில் கூடுதலாகவும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், காரைக்குடி நகராட்சிப் பகுதியில் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுவதற்கென, தமிழக அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, ரூ.140.13 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தற்போது நிறைவு பெற்று, பயன்பாட்டிற்கென, இன்றையதினம் இத்திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட 1.39 இலட்சம் மக்கள் பயன்பெறவுள்ளனர்.

மேலும், சிவகங்கை மாவட்டத்தில் நகராட்;சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், மாவட்டத்திலுள்ள 4 நகராட்சிகளுக்கு ரூ.91.56 கோடி மதிப்பீட்டிலும், 11 பேரூராட்சிகளுக்கு ரூ.163.35 கோடி மதிப்பீட்டிலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.2252.86 கோடி மதிப்பீட்டிலும் என, ஆக மொத்தம் ரூ.2507.77 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோன்று, தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், வழிகாட்டுதலின்படி, சீர்மிகு துறையாக இத்துறை விளங்கி வருகிறது.

இதுபோன்று பொதுமக்களின் தேவைகளை அறிந்து, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி, இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான முதலமைச்சராக, தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்ந்து, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் வழி நடத்தி வருகிறார்கள்.பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ அல்லது தங்களது பகுதிகளுக்குட்பட்ட மக்கள் பிரதிநிதிகள் வாயிலாகவோ அல்லது முதல்வரின் முகவரி என்ற இணையதளத்தின் வாயிலாகவோ, இ.சேவை மையம் மூலமாகவோ மனுக்கள் அளித்து, அதன்மூலம் தீர்வு பெற்று, பயன்பெறலாம் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், காரைக்குடி நகர்மன்ற தலைவர் சே.முத்துத்துரை, நகர்மன்ற துணைத்தலைவர் ந.குணசேகரன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் வி.ரகுபதி, மதுரை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் க.சரவணன், நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இரா. ராஜா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ஜீவலதா, உதவி செயற்பொறியாளர் பிரேமலதா மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 28 May 2023 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  2. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல்...
  5. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  6. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  7. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  8. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  10. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...