/* */

கொரோனா பாதித்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிறந்த இரட்டைக்குழந்தைகள்

கொரானா வைரஸ் பாதித்த பெண்ணும் அவரது இரு குழந்தைகளும் நலமாக உள்ளனர் என்று மருத்துவக் கல்லூரி முதல்வர் தெரிவித்தார்

HIGHLIGHTS

கொரோனா பாதித்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம்  பிறந்த இரட்டைக்குழந்தைகள்
X

சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரானா தொற்று பாதித்த இளம்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம்  பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள்

கொரானா தொற்று பாதித்த இளம்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் சேர்ந்தவர் மலைச்சாமி இவரது மனைவி பார்கவி (24) .இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆனது. கர்ப்பிணியான பார்கவிக்கு நேற்று முன்தினம் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குஅழைத்து வந்துள்ளனர். அப்பொழுது பார்கவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரானா வைரஸ் தொற்று உள்ளதை கண்டறிந்தனர்.

அதனைத் தொடர்ந்து, தாயையும் குழந்தையையும் காக்கும் நோக்கத்துடன் பார்கவிக்கு அறுவை சிகிச்சை மூலம், மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி தலைமையிலான மருத்துவர்கள் பிரசவம் பார்த்தனர். அவருக்கு அழகான இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தது. தற்போது கொரானா வைரஸ் பாதித்த பார்கவியும் அவரது இரு குழந்தைகளும் நலமாக உள்ளனர் என்று மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி தெரிவித்துள்ளார்.

Updated On: 23 Nov 2021 10:08 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  2. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  3. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  5. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  6. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  7. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  8. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  9. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  10. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?