கொரோனா பாதித்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிறந்த இரட்டைக்குழந்தைகள்
கொரானா வைரஸ் பாதித்த பெண்ணும் அவரது இரு குழந்தைகளும் நலமாக உள்ளனர் என்று மருத்துவக் கல்லூரி முதல்வர் தெரிவித்தார்
HIGHLIGHTS
கொரானா தொற்று பாதித்த இளம்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் சேர்ந்தவர் மலைச்சாமி இவரது மனைவி பார்கவி (24) .இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆனது. கர்ப்பிணியான பார்கவிக்கு நேற்று முன்தினம் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குஅழைத்து வந்துள்ளனர். அப்பொழுது பார்கவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரானா வைரஸ் தொற்று உள்ளதை கண்டறிந்தனர்.
அதனைத் தொடர்ந்து, தாயையும் குழந்தையையும் காக்கும் நோக்கத்துடன் பார்கவிக்கு அறுவை சிகிச்சை மூலம், மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி தலைமையிலான மருத்துவர்கள் பிரசவம் பார்த்தனர். அவருக்கு அழகான இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தது. தற்போது கொரானா வைரஸ் பாதித்த பார்கவியும் அவரது இரு குழந்தைகளும் நலமாக உள்ளனர் என்று மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி தெரிவித்துள்ளார்.