/* */

ஆசிரியர்கள்,மாணவர்கள் சார்பில் கொரோனா விழிப்புணர்வு

ஆசிரியர்கள்,மாணவர்கள் சார்பில் கொரோனா விழிப்புணர்வு
X

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இலவச மாஸ்க் மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2 ம் அலை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சிவகங்கை மாவட்ட நிர்வாகம் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இதை அடுத்து சிவகங்கை வாரச்சந்தை அருகே உள்ள மன்னர் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் இணைந்து பொதுமக்களுக்கு இலவச மாஸ்க்குகள் மற்றும் விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

இந்நிகழ்ச்சியினை சிவகங்கை நகராட்சி ஆணையர் ஐயப்பன் தொடங்கி வைத்தார். இவர்களுடன் சிவகங்கை நகர போக்குவரத்து ஆய்வாளர் திரவியம், சிவகங்கை நகர துணை ஆய்வாளர் ஈஸ்வரன் மற்றும் மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் பள்ளி ஆசிரியர் என்எஸ்எஸ், என்சிசி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிவகங்கையில் உள்ள முக்கிய வீதிகளில் பொதுமக்களுக்கு இலவச மாஸ்க் மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். தொடர்ந்து பொதுமக்களுக்கு கொரோனா முன்தடுப்பு பணியாக மாஸ்க் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்து சுகாதாரமாக இருக்கும் படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டன.

Updated On: 21 April 2021 12:11 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  3. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  5. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  6. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  8. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  10. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி