/* */

தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது ஆசிரியை உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்

ஆசிரியை உயிரிழப்பிற்கு தவறான சிகிச்சை தான் காரணம் என கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு

HIGHLIGHTS

தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது ஆசிரியை உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்
X

சிவகங்கையில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின்போது இறந்த ஆசிரியையின்  உறவினர்கள் மருத்துவமனையில் முற்றுகைப்போராட்டம் நடத்தினர்.

சிவகங்கையில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது ஆசிரியை உயிரிழப்பு. உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை அருகே உள்ள கோமாளிபட்டி ஊராட்சி பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பாரதி பணியாற்றி வருகிறார். இவர் இரண்டாவது பிரசவத்திற்காக சிவகங்கை தெப்பக்குளம் அருகே இயங்கிவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு பிரசவத்தின் போது குழந்தை பிறந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஆசிரியை பாரதி உயிரிழந்தார். ஆசிரியை பாரதியின் உயிரிழப்பிற்கு மருத்துவமனையில் தவறான சிகிச்சை தான் காரணம் என கூறி உறவினர்கள், தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 21 Sep 2021 6:05 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?