/* */

அமமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

அமமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X

சிவகங்கை தொகுதி அமமுக வேட்பாளர் அன்பரசன் கல்லல் தெற்கு ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

சிவகங்கை சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் அன்பரசன் கடந்த 4 நாட்களாக வாக்கு சேகரித்து வருகிறார். இதில் இன்று கல்லல் தெற்கு ஒன்றிய பகுதிகளான சாத்தான்பட்டி,கருங்குளம், கொடுங்குளம் ,வெற்றியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.தமிழக மக்களை இலவசம் என்ற பெயரில் சுரண்டிக் கொண்டிருக்கும் அதிமுக, திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதில் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்தவர்களுக்கு இனி ஒரு போதும் வாக்களிக்க மாட்டோம் என்றும் இந்த முறை அமமுகவுக்கு வாக்களிப்போம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வீட்டுக்கு ஒருவருக்கு அரசாங்க வேலை, விவசாயம், தொழில் வளர்ச்சியும் மேம்படுத்துதல் என்று பல்வேறு திட்டங்களை டிடிவி தினகரன் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நிறைவேற்றுவார் என்ற வாக்குறுதியை அன்பரசன் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.

Updated On: 26 March 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாசத்துடன் பண்பினை புகட்டிய தாத்தா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஈடு செய்ய இயலாத இழப்பின் கொடூரம் - மரணத்தின் வலிகள் குறித்த...
  3. லைஃப்ஸ்டைல்
    நாம் வணங்கும் நேர் கண்ட தெய்வம், அப்பா..!
  4. கோவை மாநகர்
    கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரம்: 71.44 சதவீதம்...
  6. கவுண்டம்பாளையம்
    கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  8. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.50 சதவீதம் வாக்குப்பதிவு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 53.72 சதவீதம்
  10. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!