Begin typing your search above and press return to search.
சிவகங்கை: குடும்ப அட்டை தாரர்களுக்கு உதவித்தொகை
தமிழகமெங்கும் கொரானா தொற்று பரவல் இரண்டாம் அலையாக மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில்,தமிழக அரசால் ஊரடங்கு உத்தரவு அதிக கட்டுப்பாடுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் நிதி உதவி வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முதற்கட்டமாக 2000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.மாவட்டத்தில் 829 நியாயவிலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள சுமார் 4,02,854 குடும்ப அட்டை தாரர்களுக்கு, 8 கோடியே, 57 இலட்சத்து,08 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.