Begin typing your search above and press return to search.
சிவகங்கை மகா மாரியம்மன் கோவில் பௌர்ணமி பூஜை
சிவகங்கை மகா மாரியம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்ள் கலந்து கொண்டனர்
HIGHLIGHTS
.சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் ஆயுதப்படை குடியிருப்பில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலில் பங்குனி மாத பௌர்ணமி திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.
முன்னதாக விநாயகப் பெருமானுக்கு மற்றும் பால முருகப்பெருமானுக்கும் சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் நடைபெற்றன. தொடர்ந்து கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டு மூலவர் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு கோபுர ஆராத்தி, கும்ப ஆராத்தி, நட்சத்திர ஆராத்தி மற்றும் பல்வேறு தீபாராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து 18 படி கருப்பண சுவாமிக்கு மற்றும் நாக தேவதைகள் பரிவார தெய்வங்களுக்கும் தீபாராதனை காட்டப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ மகாமாரியம்மனை வழிபட்டனர்