/* */

சிவகங்கையில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து கடையடைப்பு போராட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஸ்டூடியோ மற்றும் வீடியோ ஓளிப்பதிவாளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

சிவகங்கையில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து கடையடைப்பு போராட்டம்
X

இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஸ்டூடியோ மற்றும் ஒளிப்பதிவாளருக்கு வீடியோ எடுக்கும் பணிகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர் கொடுத்து வந்தனர்.

2021 தேர்தலில் வீடியோ எடுக்கும் பணியினை தகுதி வாய்ந்த எங்களுக்கு கொடுக்காமல் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு வழங்கியது.தேர்தல் ஆணையத்தின் இந்த செயலைக் கண்டித்து சிவகங்கை மாவட்டம் முழுவதிலும் உள்ள ஸ்டுடியோ, வீடியோ எடிட்டிங் சென்டர், கலர் லேப் மற்றும் புகைப்பட தொழில் சார்ந்த அனைத்து நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து 100 சதவீத கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.

ஸ்டுடியோ, வீடியோ உரிமையாளர் இதுகுறித்து கூறும்போது இனிவரும் தேர்தல்களில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த ஸ்டூடியோ மற்றும் வீடியோகிராபர்ளுக்கே தேர்தலில் வீடியோ எடுக்கும் பணியின் ஆணையை வழங்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடையை அடைத்து எதிர்ப்பை காட்டியுள்ளோம்.

மேலும் இது சம்பந்தமாக மாநில சங்க நிர்வாகிகளிடம் வழக்கு தொடரவும் கோரிக்கை வைப்போம் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.




Updated On: 25 March 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  10. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்