Begin typing your search above and press return to search.
சிவகங்கை பகுதியில் நாளை மின் விநியாேகம் நிறுத்தம்
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக சிவகங்கை பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுவதாக மின் பகிர்மான செயற்பொறியாளர் தகவல்.
HIGHLIGHTS
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக சிவகங்கை பகுதியில் நாளை மின்தடை மின் பகிர்மான செயற்பொறியாளர் தகவல்.
சிவகங்கையில் உள்ள கூட்டு தொகுப்பு மின் நிலையத்தில் நாளை வெள்ளிக்கிழமை பிப்ரவரி 25ஆம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவகங்கை மின் பகிர்மான செயற்பொறியாளர் வீரையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு சிவகங்கையில் உள்ள கூட்டுத் தொகுப்பு மின் நிலையத்தில் சாத்தரசன்கோட்டை உயர் அழுத்த மின் பாதை பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் காஞ்சிரங்கால், அம்மன் நகர், கக்கன் காலனி, எம்ஜிஆர் நகர், முத்துப்பட்டி, பொன்னாங்குளம், பனையூர், பையூர், வேம்பங்குடி, ஆலங்குளம், உடையநாதபுரம், கூத்தாண்டர் ஆகிய பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதியிலும் நாளை காலை 10 மணி முதல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.