Begin typing your search above and press return to search.
சிவகங்கையில் திறந்த கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை
சிவகங்கையில் புதிய கட்டுபாடுகளை மீறி திறந்த கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை
HIGHLIGHTS
தமிழகத்தின் கொரானா தொற்று இரண்டாம் அலை அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிவகங்கையில் பலசரக்கு, காய்கறி, பால், உணவகங்கள் உள்ளிட்ட கடைகள் திறந்து வியாபரம் நடைபெற்று வருகிறது.
அனுமதியை மீறி திறந்து இருந்த மற்ற கடைகளுக்கு சிவகங்கை நகராட்சி நிர்வாகம் நேரில் சென்று கடைகளை மூட உத்தரவிட்டனர். தொடர்ந்து அனுமதியை மீறி கடைகளை திறந்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.