/* */

நகராட்சி குப்பை கிடங்கில் தீவிபத்து: தீயணைப்புத் துறையினர் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்

அடிக்கடி மர்ம நபர்களால் குப்பைக் கிடங்குக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்று விடுவதும், பற்றி எறியும் தீயினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறிவிடுவதும் தொடர் கதையாகிவிட்டது.

HIGHLIGHTS

நகராட்சி குப்பை கிடங்கில்   தீவிபத்து: தீயணைப்புத் துறையினர் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்
X

சிவகங்கை நகர எல்லைக்குள் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் திடீரென நேரிட்ட தீவிபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானது.

சிவகங்கை, இந்திராநகர் பகுதியில்,நகராட்சியின் சார்பில் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.நகரின் எல்லைக்குள் அமைந்துள்ள இந்த குப்பை கிடங்கை சுற்றி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, இந்திரா நகர் குடியிருப்பு,மின் மயானம் ஆகியவை அமைந்துள்ளன.குப்பை கிடங்கில் குப்பை மலை போல் தேங்கி இருக்கும் நிலையில், இன்று குப்பை கிடங்கிற்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவம் இடத்துக்கு வந்து சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அடிக்கடி மர்ம நபர்களால் குப்பைக் கிடங்குக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்று விடுவதும், பற்றி எறியும் தீயினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறிவிடுவதும் தொடர் கதையாகிவிட்டது.

மருத்துவ கல்லூரி மருத்துவமனை நோயாளிகள் மற்றும் இந்திராநகர் குடியிருப்புவாசிகள் மூச்சு திணறல் மற்றும் சுவாசப் பிரச்சனை போன்ற பாதிப்புகளுக்கும் உள்ளாகி வருகின்றனர். இச்சூழ்நிலையில், குப்பை கிடங்கில் தீ வைத்து செல்லும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி மக்கள் காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Updated On: 23 July 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி