சமூக இடைவெளியை பின்பற்றாத காய்கறிகடைகள் அகற்றம்: அதிகாரி அதிரடி
சிவகங்கை பஸ் நிலையம் அருகே சமூக இடைவெளியை பின்பற்றாத காய்கறிகடைகளை அகற்றி அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.
HIGHLIGHTS
சிவகங்கை பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாத காய்கறி கடைகளை அகற்ற நகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.
கொரோனா 2வது அலைதாக்கத்தின் காரணமாக தமிழக அரசு கட்டுபாடுகளுடன் மற்றும் தளர்வுகளுடன் கூடிய விதிகளை பின்பற்றி பலசரக்குகடைகள் காய்கறிகடைகள், பழக்கடைகளை 12மணிவரை திறக்க அனுமதி அளித்துள்ளது.
இதனடிபடையில் சிவகங்கைநகரில் நேரு பஜாரில் செயல்பட்டுவந்த தினசரி காய்கறி சந்தை மாவட்டஆட்சியரின் அறிவுறுத்தலின்படி நகராட்சி நிர்வாகம் நகரின் மையபகுதியில் இயங்கிவந்த வேலுநாச்சியார் பேருந்து நிலையத்திற்கு மாற்றி செயல்பட அனுமதி அளித்தது.
இதனடிப்படையில் காய்கறி வியாபாரிகள் தங்களின் கடைகளை பேருந்து நிலையத்திற்கு மாற்றி சமுக இடை.வெளியை பின்பற்றி கடைகளை திறந்து அரசுக்கு ஒத்துழைப்பு தந்துள்ளனர்.
பொதுமக்களும் சமுக இடைவெளியை பின்பற்றி முகத்தில் மாஸ்க் அணிந்து கடைகளுக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். வியாபாரிகளை பாதிக்காத வண்ணம் .இந்த முயற்சியை எடுத்த தமிழக அரசுக்கு வியாரிகள் தங்களின் நன்றியை தெரிவித்தனர்