/* */

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: போலீஸை கண்டதும் "காளைகள்" ஓட்டம்!

சிவகங்கை மாவட்டம், மகிபாலன்பட்டியில் அனுமதியின்றி நடந்த மஞ்சுவிரட்டின்போது, போலீசாரை கண்டதும் மாடுபிடி வீரர்கள் ஓட்டம் பிடித்தனர்.

HIGHLIGHTS

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: போலீஸை கண்டதும் காளைகள் ஓட்டம்!
X

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை அருகே மகிபாலன்பட்டி பூங்குன்றநாயகி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக அனுமதி தரப்படாத நிலையில், இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் மஞ்சுவிரட்டு பிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பிறகு, கோவில்பட்டி வயல் பகுதியில் நூற்றுக்கணக்கான காளைகளை, மாட்டின் உரிமையாளர்கள் கட்டுமாடுகளாக அவிழ்த்து விட்டனர்.

இதில், ஆர்வமுடன் பங்கேற்றா மாடுபிடி வீரர்கள், ஏராளமான மாடுகளை பிடித்து அடக்கி தங்கள் வீரத்தை காட்டிக் கொண்டிருந்தனர். அப்போது, அனுமதியின்றி மஞ்சு விரட்டு நடக்கும் தகவல் அறிந்து, போலீசார் அங்கு வந்தனர்.

திடீரென போலீசார் வந்ததை சற்று எதிர்பாராத மாடுபிடி வீரர்களும், அங்கு திரண்டிருந்த கிராம மக்களும், கண் இமைக்கும் நேரத்தில் நாலாபுறமும் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி தடைபட்டது. இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Updated On: 27 April 2021 8:33 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் என் கல்லூரி கனவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
  10. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை