/* */

சட்டக் கல்லூரி மாணவி பலாத்காரம்: தப்பியோடி வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு

சட்டக் கல்லூரி மாணவி பலாத்காரம்: தப்பியோடி வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு
X

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை காமராஜர் காலனியைச் சேர்ந்த பாரத் லால் அப்பகுதியில் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளான். இவரது ஸ்டூடியோவிற்கு சட்டக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவி போட்டோ எடுக்க வந்துள்ளார்.

அப்போது மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து அதனை தனது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளான் பாரத்லால்.

பின்னர் அந்த மாணவியின் செல்போனுக்கு அந்த புகைப்படத்தை அனுப்பி மிரட்டி பலமுறை மாணவியை பலாத்காரம் செய்துள்ளான். இதனால் அந்த மாணவி 2 மாத கற்பமானாள். இதுகுறித்து சட்ட கல்லூரி மாணவி தனது தாயுடன் சென்று பாரத்லாலிடம் கேட்டபொழுது இருவரையும் மிரட்டியுள்ளான்.

இதையடுத்து சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவி புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய பாரத்லாலை மகளிர் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Updated On: 7 Aug 2021 2:41 PM GMT

Related News